Thursday, 13 December 2018

திருப்பாவை பாசுரம் 1
மார்கழித் திங்கள் மதி நிறைந்த நன்னாளால்
     நீராட போதுவீர் போதுமினோ நேரிழையீர்
சீர் மல்கும் ஆய்பாடிச் செல்வச் சிறுமீர்காள்
     கூர் வேல் கொடுந்தொழிலன் நந்தகோபன் குமரன்
ஏரார்ந்த கண்ணி யசோதை இளஞ்சிங்கம்
     கார்மேனிச் செங்கண் கதிர் மதியம் போல் முகத்தான்
நாராயணனே நமக்கே பறை தருவான்
     பாரோர் புகழப் படிந்து ஏல் ஓர் எம்பாவாய்.
நேர் இழையீர் - அழகிய ஆபரணங்களை அணிந்துள்ளவர்களே; பறை - விருப்பம்;
ஏல் - கேள்; ஓர் - இதை நினைப்பாயாக; ஏலோர் - பாதத்தை நிறைத்து கிடக்கும் சொல்;
எம்பாவாய் - எம்முடைய பாவையே - காமன்(மன்மதன்) மனைவி ரதி என்றும் கொள்ளலாம்.
"மேல் காமனை நோற்கையாலே அவன் மனைவியான ரதியை சொல்லியதாகவும் ஆகும்"

திருப்பள்ளியெழுச்சி


  அ௫ளியவர் : மாணிக்கவாசகர்

  திருமுறை : எட்டாம் திருமுறை

  பண் :

  நாடு : பாண்டியநாடு

  தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)




எட்டாம்-திருமுறை-திருவாசகம்




திருச்சிற்றம்பலம்


போற்றியென் வாழ்முத லாகிய பொருளே
  புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண்
டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும்
  எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம்
சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ்
  திருப்பெருந் துறை உறை சிவபெருமானே
ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  1 

அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய்
  அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின்
கருணையின் சூரியன் எழவெழ நயனக்
  கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம்
திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே
  அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே.  2 

கூவின பூங்குயில் கூவின கோழி
  குருகுகள் இயம்பின இயம்பின சங்கம்
ஓவின தாரகை ஒளியொளி உதயத்து
  ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத்
தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  3 

இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால்
  இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால்
துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால்
  தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால்
சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால்
  திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே
என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  4 

பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால்
  போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர்
கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால்
  கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச்
சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா
  சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து
ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  5 

பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் 
  பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும்
மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின்
  வணங்குகின்றார் அணங் கின்மண வாளா
செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ்
  திருப்பெருந் துறையுறை சிவபெருமானே
இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும்
  எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே.  6 

அது பழச்சுவையென அமுதென அறிதற்கு
  அரிதென எளிதென அமரும் அறியார்
இது அவன் திருவுரு இவன் அவன் எனவே
  எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும்
மதுவளர் பொழில்திரு உத்தர கோச
  மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா
எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம்
  எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே.  7 

முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய்
  மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார்
பந்தணை விரலியும் நீயும்நின்னடியார்
  பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே
செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித்
  திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய்
  ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே.  8 

விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா
  விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள்
மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே
  வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம்
கண்ணகத் தேநின்று களிதரு தேனே
  கடலமு தேகரும் பேவிரும் படியார்
எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய்
  எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே.  9 

புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம்
  போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி
சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித்
  திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம்
அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப்
  படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும்
அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய்
  ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே.  10 
 


Thursday, 15 November 2018


தமிழ் இலக்கியம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேலான தொடர்ச்சி கொண்ட உலகின் சிறந்த இலக்கியங்களில் ஒன்று. வாழ்வின் பல்வேறு கூறுகளை தமிழ் இலக்கியங்கள் இயம்புகின்றன. தமிழ் மொழியில் மரபுரீதியாக 96 இலக்கிய நூல் வகைகள் உண்டு. இன்று தமிழ் மொழியில் பல புது இலக்கிய வகைகள் உருவாக்கப்பட்டு தமிழ் இலக்கியம் விரிந்து செல்கின்றது.
பண்டைக்காலத்தில் வாழ்ந்த தமிழ்ப்புலவர்கள் என்றும் அழியாத தமிழ் இலக்கியங்களை இயற்றி பல நல்ல கருத்துகளை வெளியிட்டுள்ளனர். தமிழில் உள்ள இலக்கியங்களில் மிகவும் பழமையானவை சங்க இலக்கியங்கள் ஆகும்.
மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாடு பின்வருமாறு.

  • பழங்காலம்
    • சங்க இலக்கியம் (கிமு 300 - கிபி 300)
    • நீதி இலக்கியம் (கிபி 300 - கிபி 500)
  • இடைக்காலம்
    • பக்தி இலக்கியம் (கிபி 700 - கிபி 900)
    • காப்பிய இலக்கியம் (கிபி 900 கிபி 1200)
    • உரைநூல்கள் (கிபி 1200 - கிபி 1500)
    • புராண இலக்கியம் (கிபி 1500 - கிபி 1800)
    • புராணங்கள், தலபுராணங்கள்
    • இஸ்லாமிய தமிழ் இலக்கியம்
  • இக்காலம்
    • பத்தொன்பதாம் நூற்றாண்டு
      • கிறிஸ்தவ தமிழ் இலக்கியம்
      • புதினம்
    • இருபதாம் நூற்றாண்டு
      • கட்டுரை
      • சிறுகதை
      • புதுக்கவிதை
      • ஆராய்ச்சிக் கட்டுரை

இந்த இணைய தளம் தமிழ் இலக்கியங்களை அனைவரும் எளிதாக கண்டறிய, புரிந்துகொள்ள உதவும் நோக்கோடு அமைக்கப்பட்டிருகிறது. உங்கள் கட்டுரைகள், கவிதை தொகுப்புகள் , ஆராய்ச்சிக் கட்டுரைகள் ஆகியவற்றை இந்த இணைய தளத்தில் நீங்கள் வெளியிடலாம்.

Here is an entry from Ethnologue about Tamil.

எழுத்திலக்கணம்

(Eluthu Ilakkanam)

எண், பெயர், முறை, பிறப்பு, உருவம், மாத்திரை, முதல், ஈறு, இடைநிலை, போலி, பதம், புணர்ப்பு போன்ற பன்னிரண்டு பகுதிகளையும் எடுத்துரைப்பது எழுத்து இலக்கணம் ஆகும். எழுத்து - மொழிக்கு ஒலிவடிவம், வரிவடிவம் ஆகிய இரண்டையும் கொடுக்கிறது. ஒலி வடிவம் என்பது ஒரு எழுத்தை உச்சரிக்கும்போது எழும் ஒலியைக் குறிக்கின்றது. வரி வடிவம் என்பது எழுத்தின் வடிவத்தைக் குறிக்கின்றது. எழுத்திலக்கணம் இரு வகைப்படும். அவை,
  1. 1. முதல் எழுத்து
  2. 2. சார்பு எழுத்து

எழுத்து இலக்கணம் வகைகள்

(Eluthu Ilakkanam Vagaigal)

Tuesday, 30 October 2018

பாடல் : 001
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

*****
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

பாடல் : 002
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
குணங்குடி மஸ்தான் சாகிபு

*****
ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..
அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்க்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

பாடல் : 003

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
*****
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்
யாருள்ளார் பராபரமே

பாடல் : 004
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
*****
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்
மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே

பாடல் : 005
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

****

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,
நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

Monday, 8 October 2018

வரலாறு

மு. வரதராசனின் தமிழ் இலக்கியம் என்னும் நூலில் தரப்பட்டிருக்கும் தமிழ் இலக்கிய கால வகைப்பாட்டை அடிப்படையாகக் கொண்ட வகைப்பாடு பின்வருமாறு.
  • பழங்காலம்
  • இடைக்காலம்
  • இக்காலம்
  • பத்தொன்பதாம் நூற்றாண்டு
  • இருபதாம் நூற்றாண்டு
  • இருபத்தோராம் நூற்றாண்டு

தற்கால இலக்கியம்

18 ஆம், 19 ஆம் நூற்றாண்டுக் காலப்பகுதியில் தமிழ்நாட்டில் அரசியல், மதம், கல்வி போன்ற தளங்களில் பல விதமான மாற்றங்கள் இடம்பெற்றன. குன்றக்குடி, திருவாவடுதுறை, திருப்பனந்தாள் போன்ற சைவ மடங்களின் ஆதரவாலும், சில புலவர் பரம்பரையினரின் முயற்சியாலும் தமிழ் இலக்கியச் செல்வங்கள், விழுமியங்கள் அழிவுறுவது காலத்தால் தடுக்கப்பட்டது. அன்னிய ஆட்சியாலும், அவர்களுக்கு முட்டுக் கொடுப்பவர்களாலும், மேற்கத்திய கலாச்சாரத்தின் பாதிப்பாலும், ஆங்கில மொழியின் செல்வாக்காலும் நசிவடைந்து கிடந்தன தமிழ் மொழி, தமிழ் இலக்கியம்; பின்னர் அச்சியந்திரங்களின் வருகையும், நிலையான ஆங்கிலேயர் ஆட்சியும், அதன்பின் ஏற்பட்ட சுதந்திர இந்திய ஆட்சியும் மதச்சுதந்திரமும், கல்வி முறையில் ஏற்பட்ட தோற்ற வளர்ச்சி, நவீன சிந்தனைகளின் உருவாக்கமும் போன்ற காரணிகளால் தமிழ் மொழியும், இலக்கியமும் இக்காலக்கட்டத்தில் பெரிதும் வளர்ச்சியுற்றன. இக்காலக்கட்டத்தில் இடம்பெற்ற முக்கிய மாற்றமாகக் குறிப்பிடத்தக்க விடயங்களாவன:
  • சங்க இலக்கியங்கள் மீளக் கண்டுபிடிக்கப்பட்டதும் அச்சேற்றியதும்.
  • உரைநடையில் எழுதுவது அறிமுகமானது. (19ஆம் நூற்றாண்டின் கடைப்பகுதி)
  • புதுக்கவிதை எனும் புதுப்பாணி தோற்றம் பெற்றது. (20ஆம் நூற்றாண்டின் முற்பகுதி)
  • மணிப்பிரவாள நடை ஒழிந்தது. (20ஆம் நூற்றாண்டின் பிற்பகுதி)
அச்சியந்திரங்களின் வருகையால் ஏடுகளில் மட்டும் இருந்த தமிழ் இலக்கியங்கள் உ. வே. சாமிநாதையர்,ஆறுமுக நாவலர், சி. வை. தாமோதரம்பிள்ளை போன்றோரின் மீள் கண்டுபிடிப்பாலும்,அயராத உழைப்பாலும் அச்சாக வெளிவந்தது.

Tuesday, 11 September 2018








v jkpo; tsh;r;rpj; Jiw rhh;ghf 25.06.2018 md;W ChPR fy;Y}hpapy; eilngw;w khtl;l mstpyhd Ngr;Rg; Nghl;bapy; ek; fy;Y}hpapd; %d;whkhz;L fzpjj;Jiw khztp rp. rq;ftp ,uz;lhk; ghprhf &3000 ngw;Ws;shh;.


v jkpo; tsh;r;rpj; Jiw rhh;ghf 25.06.2018 md;W ChPR fy;Y}hpapy; eilngw;w khtl;l mstpyhd Ngr;R> fl;Liu> ftpijg; Nghl;bapy; ek; fy;Y}hpapd;  rhh;ghf 3khztpfs; gq;F nfhz;L  ghuhl;Lr; rhd;wpjioAk; ngw;Ws;sdh;.


Monday, 12 March 2018

மார்ச் மாத அறிக்கை






தமிழ்த்துறை
மார்ச் மாத அறிக்கை – 2017 -2018



யாமரியேன் பாராபரமே என்று நேற்று ஹரிஹரன் எழுதியது இந்த பராபரக் கண்ணி பற்றி எழுதத் தூண்டியது.

பராபரக் கண்ணி எழுதியவர் குணங்குடி மஸ்தான். மொத்தம் நூறு பாடல்களைக் கொண்டது. இரண்டு இரண்டடிகள் கொண்டது .

சமயங்களைக் கடந்த மதங்களைக் கடந்த பாடல்களைக் கொண்டது குணங்குடி மஸ்தான் பாடல்கள். தாயுமானவர் பாடல்கள் போல் பெரும் சிறப்புக்குறியன.

ஏறத்தாழ ஒத்தக் கருத்தினை கொண்டவை. சரவணப் பெருமாள் ஐயர், ஐயா சுவாமி முதலியார், வேங்கடராயப்பிள்ளைக் கவிராயர் சபாபதி முதலியார், மற்றும் செய்கு அப்துல் காதிர் நயினார் லெப்பை ஆலிம் புலவர் போன்றவர்களால் புகழ் மாலைப் பாடப்பெற்ற சிறப்பு திரு குணங்குடி மஸ்தான் பாடல்களுக்கு உண்டு.

முடிந்த வரை ஒரு பதிவிற்கு 5 பாடல்கள் வீதம் பதிக்க முயல்கிறேன். கற்றுணர்ந்த பெரியோர்களும், எல்லாம் வல்ல ஆண்டவனும் துணை புரிவானாக. தவறு கண்டவிடத்தில் சுட்டிக் காட்டி திருத்துமாறு வேண்டுகிறேன்.



பாடல் : 001
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

*****
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

பாடல் : 002
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
குணங்குடி மஸ்தான் சாகிபு

*****
ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..
அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்க்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

பாடல் : 003

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
*****
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்
யாருள்ளார் பராபரமே

பாடல் : 004
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
*****
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்
மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே

பாடல் : 005
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

****

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,
நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே