திருப்பள்ளியெழுச்சி
அ௫ளியவர் : மாணிக்கவாசகர்
திருமுறை : எட்டாம் திருமுறை
திருமுறை : எட்டாம் திருமுறை
பண் :
நாடு : பாண்டியநாடு
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
நாடு : பாண்டியநாடு
தலம் : திருப்பெருந்துறை (ஆவுடையார்கோயில்)
எட்டாம்-திருமுறை-திருவாசகம்
- திருவாசகம் -I (மாணிக்க வாசகர் அருளியது)
- திருவாசகம் (Thiruvasagam)
- எட்டாம் திருமுறை - திருவாசகம், திருச்சிற்றம்பலக் கோவையார்
- சிவபுராணம் - பதிகமும் உரையும்
- 8. 001 சிவபுராணம் - நமச்சிவாய வாஅழ்க
- 8. 002 கீர்த்தித் திருவகவல் - தில்லை மூதூர் ஆடிய
- 8. 003 திருவண்டப் பகுதி - அண்டப் பகுதியின்
- 8. 004 போற்றித் திருவகவல் - நான்முகன் முதலா
- 8. 005 திருச்சதகம் - மெய்தான் அரும்பி
- 8. 006 நீத்தல் விண்ணப்பம் - கடையவ னேனைக்
- 8. 007 திருவெம்பாவை - ஆதியும் அந்தமும்
- திருவாசகம் - II மாணிக்க வாசகர் அருளியது
- 8. 008 திரு அம்மானை - செங்கண் நெடுமாலுஞ்
- 8. 009 திருப்பொற் சுண்ணம் - முத்துநல் தாமம்பூ
- 8. 010 திருக்கோத்தும்பி - பூவேறு கோனும்
- 8.011 திருத்தெள்ளேணம் - திருமாலும் பன்றியாய்ச்
- 8. 012 திருச்சாழல் - பூசுவதும் வெண்ணீறு
- 8. 013 திருப்பூவல்லி - இணையார் திருவடி
- 8. 014 திருஉந்தியார் - வளைந்தது வில்லு
- 8. 015 திருத்தோள் நோக்கம் - பூத்தாரும் பொய்கைப்
- 8. 016 திருப்பொன்னூசல் - சீரார் பவளங்கால்
- 8. 017 அன்னைப் பத்து - வேத மொழியர்வெண்
- 8. 018 குயிற்பத்து - கீத மினிய குயிலே
- 8. 019 திருத்தசாங்கம் - ஏரார் இளங்கிளியே
- 8. 020 திருப்பள்ளியெழுச்சி - போற்றியென் வாழ்முத
- 8. 021 கோயில் மூத்த திருப்பதிகம் - உடையாள் உன்தன்
- 8. 022 கோயில் திருப்பதிகம் - மாறிநின்றென்னை
- 8. 023 செத்திலாப் பத்து - பொய்யனேன் அகம்நெகப்
- 8. 024 அடைக்கலப் பத்து - செழுக்கமலத் திரளனநின்
- 8. 025 ஆசைப்பத்து - கருடக்கொடியோன் காணமாட்டாக்
- 8. 026 அதிசயப் பத்து - வைப்பு மாடென்றும்
- 8. 027 புணர்ச்சிப்பத்து - சுடர்பொற்குன்றைத் தோளாமுத்தை
- 8. 028 வாழாப்பத்து - பாரொடு விண்ணாய்ப்
- 8. 029 அருட்பத்து - சோதியே சுடரே
- 8. 030 திருக்கழுக்குன்றப் பதிகம் - பிணக்கிலாத பெருந்துறைப்பெரு
- 8. 031 கண்டபத்து - இந்திரிய வயமயங்கி
- 8. 032 பிரார்த்தனைப் பத்து - கலந்து நின்னடி
- 8. 033 குழைத்த பத்து - குழைத்தால் பண்டைக்
- 8. 034 உயிருண்ணிப்பத்து - பைந்நாப் பட அரவேரல்குல்
- 8. 035 அச்சப்பத்து - புற்றில்வாள் அரவும்
- 8. 036 திருப்பாண்டிப் பதிகம் - பருவரை மங்கைதன்
- 8. 037 பிடித்த பத்து - உம்பர்கட் ரசே
- 8. 038 திருவேசறவு - இரும்புதரு மனத்தேனை
- 8. 039 திருப்புலம்பல் - பூங்கமலத் தயனொடுமால்
- 8. 040 குலாப் பத்து - ஓடுங் கவந்தியுமே
- 8. 041 அற்புதப்பத்து - மைய லாய்இந்த
- 8. 042 சென்னிப்பத்து - தேவ தேவன்மெய்ச்
- 8. 043 திருவார்த்தை - மாதிவர் பாகன்
- 8. 044 எண்ணப்பதிகம் - பாருருவாய
- 8. 045 யாத்திரைப் பத்து - பூவார் சென்னி
- 8. 046 திருப்படை எழுச்சி - ஞானவாள் ஏந்தும்ஐயர்
- 8. 047 திருவெண்பா - வெய்ய வினையிரண்டும்
- 8. 048 பண்டாய நான்மறை - பண்டாய நான்மறையும்
- 8. 049 திருப்படை ஆட்சி - கண்களிரண்டும் அவன்கழல்
- 8. 050 ஆனந்தமாலை - மின்னே ரனைய
- 8. 051 அச்சோப் பதிகம் - முத்திநெறி அறியாத
திருச்சிற்றம்பலம்
போற்றியென் வாழ்முத லாகிய பொருளே புலர்ந்தது பூங்கழற் கிணைதுணை மலர்கொண் டேற்றிநின் திருமுகத் தெமக்கருள் மலரும் எழில்நகை கொண்டுநின் திருவடி தொழுகோம் சேற்றிதழ்க் கமலங்கள் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறை உறை சிவபெருமானே ஏற்றுயர் கொடியுடை யாய்எனை யுடையாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 1
அருணன் இந்திரன் திசை அணுகினன் இருள்போய் அகன்றது உதயம்நின் மலர்த்திரு முகத்தின் கருணையின் சூரியன் எழவெழ நயனக் கடிமலர் மலரமற்று அண்ணலங் கண்ணாம் திரள்நிரை அறுபதம் முரல்வன இவையோர் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே அருள் நிதி தர வரும் ஆனந்த மலையே அலைகடலே பள்ளி யெழுந்தருளாயே. 2
கூவின பூங்குயில் கூவின கோழி குருகுகள் இயம்பின இயம்பின சங்கம் ஓவின தாரகை ஒளியொளி உதயத்து ஒருப்படு கின்றது விருப்பொடு நமக்குத் தேவநற் செறிகழல் தாளிணை காட்டாய் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே யாவரும் அறிவரி யாய்எமக் கெளியாய் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 3
இன்னிசை வீணையர் யாழினர் ஒருபால் இருக்கொடு தோத்திரம் இயம்பினர் ஒருபால் துன்னிய பிணைமலர்க் கையினர் ஒருபால் தொழுகையர் அழுகையர் துவள்கையர் ஒருபால் சென்னியில் அஞ்சலி கூப்பினர் ஒருபால் திருப்பெருந் துறையுறை சிவபெரு மானே என்னையும் ஆண்டுகொண்டின்னருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 4
பூதங்கள் தோறும்நின் றாய்எனின் அல்லால் போக்கிலன் வரவிலன் எனநினைப் புலவோர் கீதங்கள் பாடுதல் ஆடுதல் அல்லால் கேட்டறி யோம்உனைக் கண்டறி வாரைச் சீதங்கொள் வயல்திருப் பெருந்துறை மன்னா சிந்தனைக் கும்அரியாய் எங்கள் முன்வந்து ஏதங்கள் அறுத்தெம்மை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 5
பப்பற வீட்டிருந்து உணரும்நின் அடியார் பந்தனை வந்தறுத் தார் அவர் பலரும் மைப்புறு கண்ணியர் மானுடத் தியல்பின் வணங்குகின்றார் அணங் கின்மண வாளா செப்புறு கமலங்கண் மலரும்தண் வயல்சூழ் திருப்பெருந் துறையுறை சிவபெருமானே இப்பிறப்பு அறுத்து எமை ஆண்டருள் புரியும் எம்பெரு மான்பள்ளி யெழுந்தருளாயே. 6
அது பழச்சுவையென அமுதென அறிதற்கு அரிதென எளிதென அமரும் அறியார் இது அவன் திருவுரு இவன் அவன் எனவே எங்களை ஆண்டுகொண்டு இங் கெழுந்தருளும் மதுவளர் பொழில்திரு உத்தர கோச மங்கையுள்ளாய்திருப் பெருந்துறை மன்னா எதுஎமைப் பணிகொளு மாறது கேட்போம் எம்பெருமான்பள்ளி யெழுந்தருளாயே. 7
முந்திய முதல்நடு இறுதியும் ஆனாய் மூவரும் அறிகிலர் யாவர்மற் றறிவார் பந்தணை விரலியும் நீயும்நின்னடியார் பழங்குடில் தொறும்எழுந் தருளிய பரனே செந்தழல் புரைதிரு மேனியுங் காட்டித் திருப்பெருந் துறையுறை கோயிலும் காட்டி அந்தணன் ஆவதும் காட்டிவந் தாண்டாய் ஆரமுதே பள்ளி யெழுந்தருளாயே. 8
விண்ணகத் தேவரும் நண்ணவும் மாட்டா விழுப்பொரு ளேயுன தொழுப்படி யோங்கள் மண்ணகத் தேவந்து வாழச்செய் தானே வண்திருப் பெருந்துறை யாய்வழி யடியோம் கண்ணகத் தேநின்று களிதரு தேனே கடலமு தேகரும் பேவிரும் படியார் எண்ணகத் தாய்உல குக்குயி ரானாய் எம்பெருமான்பள்ளி எழுந்தருளாயே. 9
புவனியில் போய்ப்பிற வாமையில் நாள்நாம் போக்குகின் றோம்அவ மேஇந்தப்பூமி சிவனுய்யக் கொள்கின்ற வாறென்று நோக்கித் திருப்பெருந் துறையுறை வாய்திரு மாலாம் அவன்விருப் பெய்தவும் மலரவன் ஆசைப் படவும்நின் அலர்ந்த மெய்க்கருணையும் நீயும் அவனியில் புகுந்தெமை ஆட்கொள்ள வல்லாய் ஆரமு தேபள்ளி யெழுந்தருளாயே. 10
No comments:
Post a Comment