Tuesday, 30 October 2018

பாடல் : 001
அண்ட புவனமென்றும் ஆடுதிருக் கூத்தினையான்
கண்டு மகிழ்ந்திடவே காட்டாய் பராபரமே.

*****
எங்கும் நிறைந்த பராபரப் பொருளே.. அண்டம், புவனங்களில் ஆடும் நின் திருக்கூத்தினை நாங்கள் மனம் மகிழ காட்டிடுவாய்... அந்த பேரின்பைதை தந்திடுவாய்.

பாடல் : 002
ஆதியாய் ஆண்டவனாய் அஃததுவாய் நின்றபெருஞ்
சோதியாய் நின்மலமாய் சூழ்ந்தாய் பராபரமே.
குணங்குடி மஸ்தான் சாகிபு

*****
ஆதியானவனே... ஆண்டவனானவனே.. அதததுவாய் நின்ற பெருஞ்சோதியே..
அப்பழுக்கற்ற நிர்மலமாய் எங்க்கும் சூழ்ந்திருக்கிறாய் நீ பராபரமே

பாடல் : 003

வேத மறைப்பொருளை வேதாந்தத் துஉட்கருவை
ஓதி உனையறிந்தார் உண்டோ பராபரமே
*****
வேதத்தின் மறைப்பொருளையும், வேதாந்த உட்கருத்தினையும் ஓதி உன்னையறிந்தவர்கள்
யாருள்ளார் பராபரமே

பாடல் : 004
அண்ட புவனமுடன் ஆகாசமென் றுசும்பிக்
கொண்டாடும் மெய்ஞ்ஞானக் கூத்தே பராபரமே
*****
அண்டங்களும் புவனங்களும் ஆகாசமென்றசைந்துக் கொண்டாடும்
மெய்ஞ்சானக் கூத்தான பராபரமே

பாடல் : 005
நாவாற் புகழ்க்கெட்டா நாயகனே நாதாந்தம்
பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

****

நாவினால் புகழவியலாத அதற்கு எட்டாத நாயகனே,
நாகந்த பூவாய் மலர்ந்திருக்க பூத்தாய் பராபரமே

No comments:

Post a Comment