ஓவியங்கள்
எல்லோரா, அஜந்தா, சித்தன்னவாசல் ஆகியவை இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களாகும். இவை குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் மகாராஷ்டிராவிலும், சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் உள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்டிருந்தாலும், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.
அஜந்தா குகைகள்: இவை 29 குகைகளின் தொகுப்பாகும்.
- இவை புத்த கட்டிடக்கலை, குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது.
- இந்த குகைகளில் புத்த மதத்தின் ஜாதக கதைகள் மற்றும் பிற மதக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
- அஜந்தா குகைகளில் உள்ள ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.
- இவை புத்த, இந்து மற்றும் ஜெயின் மதங்களின் கோயில்கள் மற்றும் மடங்களைக் கொண்டுள்ளது.
- எல்லோரா குகைகளில் உள்ள கைலாசநாதர் கோயில் (Kailasa temple) உலகப்புகழ் பெற்றது.
- இங்குள்ள குகை ஓவியங்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை.
- இந்த ஓவியங்களில் அரசன், அரசியர், தாமரைக்குளம், மீன்கள், வாத்துகள் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
சித்தன்ன வாசல் ஓவியங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இவற்றில் கீழே உள்ள அடுக்கு சொரசொரப்பான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீதுள்ள இரண்டாவது அடுக்கு. நன்கு அரைத்து உருவாக்கப் பட்ட மென்மையான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீது மூன்றாவது அடுக்காக வண்ண ஓவியங்கள் உள்ளன. இவ்வடுக்குகள் முறையே 2.5 மி.மீ. / 0.5 மி.மீ / 0.4 மி.மீ கனம் உள்ளவையாகக் காணப்படுகின்றன. இதற்கு மாறாக அஜந்தாவிலுள்ள ஓவியங்களின் அடித்தளம் 15 மி.மீ வரை கன அளவு கொண்டதாய் உள்ளது. அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் தலை சிறந்தவையாக விளங்கினாலும் அவற்றின் தொழில் நுட்பம் சித்தன்ன வாசல் ஓவியங்களோடு ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே உள்ளது. | |
சித்தன்ன வாசல் ஓவியங்களில் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களில் இருந்து செய்யப் பட்டவை ஆகும். |