Thursday, 17 July 2025

 

                                                               ஓவியங்கள் 

எல்லோரா, அஜந்தா, சித்தன்னவாசல் ஆகியவை இந்தியப் பாரம்பரியத்தின் முக்கிய இடங்களாகும். இவை குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் புகழ் பெற்றவை. அஜந்தா மற்றும் எல்லோரா குகைகள் மகாராஷ்டிராவிலும், சித்தன்னவாசல் புதுக்கோட்டை மாவட்டத்திலும் உள்ளன. இந்த மூன்று இடங்களிலும் உள்ள ஓவியங்கள் வெவ்வேறு காலக்கட்டங்களில் வரையப்பட்டிருந்தாலும், இவை அனைத்தும் இந்திய கலாச்சாரத்தின் முக்கிய அம்சங்களாக கருதப்படுகிறது.

அஜந்தா குகைகள்: இவை 29 குகைகளின் தொகுப்பாகும்.

  • இவை புத்த கட்டிடக்கலை, குகை ஓவியங்கள் மற்றும் சிற்பங்களுக்குப் பெயர் பெற்றது.
  • இந்த குகைகளில் புத்த மதத்தின் ஜாதக கதைகள் மற்றும் பிற மதக் காட்சிகள் சித்தரிக்கப்பட்டுள்ளன.
  • அஜந்தா குகைகளில் உள்ள ஓவியங்கள் உலகப்புகழ் பெற்றவை.
எல்லோரா குகைகள்
இவை 34 குகைகளைக் கொண்டுள்ளது.
  • இவை புத்த, இந்து மற்றும் ஜெயின் மதங்களின் கோயில்கள் மற்றும் மடங்களைக் கொண்டுள்ளது.
  • எல்லோரா குகைகளில் உள்ள கைலாசநாதர் கோயில் (Kailasa temple) உலகப்புகழ் பெற்றது.
சித்தன்னவாசல் குகைகள்
இவை தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ளது.
  • இங்குள்ள குகை ஓவியங்கள் பாண்டியர் காலத்தைச் சேர்ந்தவை.
  • இந்த ஓவியங்களில் அரசன், அரசியர், தாமரைக்குளம், மீன்கள், வாத்துகள் போன்ற காட்சிகள் வரையப்பட்டுள்ளன.
சித்தன்ன வாசல்!
இந்த மூன்று இடங்களிலும் உள்ள ஓவியங்கள், இந்தியக் கலை மற்றும் கலாச்சாரத்தின் முக்கியத்துவம் வாய்ந்தவை மற்றும் உலகெங்கிலும் உள்ளவர்களுக்கு ஒரு முக்கிய சுற்றுலாத் தலமாக உள்ளது.
 அஜந்தா ஓவியம்
அஜந்தா, பாக் போன்ற இடங்களில் காணும் ஓவியங்களையும் காஞ்சிபுரம், சித்தன்ன வாசல், தஞ்சாவூர் போன்ற இடங்களில் காணும் தமிழ் நாட்டு ஓவியங்களையும் ஆய்வு செய்த தொல்லியல் வேதியலறிஞர் எஸ்.பரமசிவன் என்பவர், இவற்றில் முன்னதை முதலாம் வகைத் தொழில் நுட்ப ஓவியம் என்றும், பின்னதை இரண்டாம் வகைத் தொழில் நுட்ப ஓவியம் என்றும் பெயரிட்டு, அவற்றின் தொழில் நுட்பங்களைப் பின்வருமாறு விரித்துக் கூறுகின்றார்:
இவ்விரண்டு ஓவியங்களிலும் வேறுபட்ட நுட்பங்கள் பின்பற்றப் பட்டு ஓவியங்கள் வரையப் பட்டுள்ளன. அஜந்தா, எல்லோரா, பாக் போன்ற இடங்களில் உள்ள ஓவியங்கள் `டெம்பரா' என்றழைக்கப் படும் பற்றோவிய முறையினைப் பின்பற்றி வரையப் பட்டவை. மாட்டுச் சாணம், உமி, தாவர நார் ஆகியவை பற்றுப் பொருளாகக் கலந்த களி மண்ணைப் பாறைச் சுவர் மீது பூசி அதன் மீது மெல்லிய சுண்ணாம்புப் பூச்சினை அடித்து முதல் வகை ஓவியங்களின் அடித்தளம் உருவாக்கப் பட்டிருக்கிறது. தாதுப் பொருட்களால் தயாரிக்கப் பட்ட வண்ணத்தைக் கொண்டு இவற்றில் ஓவியம் தீட்டியுள்ளனர்.
இரண்டாம் வகையான தமிழ்நாட்டுச் சித்தன்ன வாசல், காஞ்சிபுரம், தஞ்சாவூர் ஓவியங்கள் அடித்தளம் நன்கு உலர்ந்த பின் வரையப் பட்ட சுவரோவிய முறையைப் பின்பற்றி வரையப் பட்டவை ஆகும். இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டாகச் சித்தன்ன வாசல் குடை வரைக் கோயில் சமண ஓவியங்கள் திகழ்கின்றன. அஜந்தாவில் காணப்படும் வலிவும் ஒட்டுத் தன்மையும் குறைந்த அடித்தளத்திற்கு. மாறாக, வலிவும் ஒட்டுத் தன்மையும் மிக்க அடித்தளத்தினைச் சித்தன்ன வாசல் ஓவியம் கொண்டிருக்கிறது. சித்தன்ன வாசல் ஓவியங்களின் அடித்தளம் அஜந்தாவிலுள்ள களிமண், சுண்ணாம்புப் பூச்சுக்கொண்ட அடித்தளத்திற்கு மாறாக நன்கு தயாரிக்கப் பட்ட முழுவதும் சுண்ணாம்பால்     ஆன     உறுதியான அடித்தளமாக விளங்குகிறது. சித்தன்ன வாசலில் சுண்ணாம்பு நீரையே மீண்டும் அடித்தளத்தின் மீது பூசி அதனை உறுதியாக்கியுள்ளனர்.

சித்தன்ன வாசல் ஓவியங்கள்

சித்தன்ன வாசல் ஓவியங்கள் மூன்று அடுக்குகளைக் கொண்டவையாகத் திகழ்கின்றன. இவற்றில் கீழே உள்ள அடுக்கு சொரசொரப்பான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீதுள்ள இரண்டாவது அடுக்கு. நன்கு அரைத்து உருவாக்கப் பட்ட மென்மையான சுண்ணாம்புக் கலவைப் பூச்சாலானது. அதன் மீது மூன்றாவது அடுக்காக வண்ண ஓவியங்கள் உள்ளன. இவ்வடுக்குகள் முறையே 2.5 மி.மீ. / 0.5 மி.மீ / 0.4 மி.மீ கனம் உள்ளவையாகக்     காணப்படுகின்றன.     இதற்கு மாறாக அஜந்தாவிலுள்ள ஓவியங்களின் அடித்தளம் 15 மி.மீ வரை கன அளவு கொண்டதாய் உள்ளது. அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் தலை சிறந்தவையாக விளங்கினாலும் அவற்றின் தொழில் நுட்பம் சித்தன்ன வாசல் ஓவியங்களோடு ஒப்பிடும்போது தரம் குறைந்ததாகவே உள்ளது.

சித்தன்ன வாசல் ஓவியங்களில் வெள்ளை, கறுப்பு, மஞ்சள், சிவப்பு, பச்சை முதலிய வண்ணங்கள் பயன்படுத்தப் பட்டுள்ளன. இவை இயற்கையில் கிடைக்கும் கனிமப் பொருட்களில் இருந்து செய்யப் பட்டவை ஆகும்.


















Wednesday, 4 June 2025

 சமணர் தமிழ்த் தொண்டு

சமண சமயம் தமிழகம் வந்த பிறகு தமிழறிஞர்கள் பலர் சமணத்தைத் தழுவினர். ஊன் உணவு இல்லாத காய்கறி உணவை இப்போது சைவ உணவு எனக் கூறுகிறோம். ஆனால், பழங்காலத்தில் இவ்வகை உணவு ஆருகத உணவு எனப்பட்டது. ஆருகதம் என்பது சமணத்தின் மற்றொரு பெயர் ஆகும். மகாவீரர் என்ற சமணப் பெரியவர் மோட்சம் அடைந்த நாளே தீபாவளி ஆகும். இதனை இந்து சமயம் பிற்காலத்தில் தங்களுடைய விழாவாக ஆக்கிக் கொண்டது. இவ்வாறு மக்களின் வாழ்வில் பல மாற்றங்களை ஏற்படுத்திய சமணர்கள், இலக்கிய, இலக்கணங்கள், நிகண்டுகள், சிறு பிரபந்தங்கள் ஆகியவற்றை இயற்றித் தமிழை வளமுடையதாக்கினர்.

இலக்கியம்

சங்க காலத்தில் சமண அறிஞர் பலர் இலக்கியப் பணிகளைச் செய்துள்ளனர். ஐம்பெரும் காப்பியங்களில் சிலப்பதிகாரம் சமண சமயக் கருத்துகள் பலவற்றைக் கூறும் நூலாகும். சீவக சிந்தாமணி சமண முனிவராகிய திருத்தக்க தேவரால் இயற்றப்பட்டதாகும். ஐம்பெரும் காப்பியங்களில் வளையாபதி என்ற மற்றொரு காவியமும் சமணர் அளித்த நன்கொடையாகும். நாலடியார், பழமொழி நானூறு, ஏலாதி, சிறுபஞ்சமூலம், அறநெறிச்சாரம் ஆகிய அறநூல்கள் சமணர் அளித்தவையேயாகும்.

இலக்கணம்

தொல்காப்பியம் உயிர்களை ஆறு வகையாகப் பகுத்துக் கூறுகின்றது. அது சமண சமயத்தைச் சார்ந்த கருத்தாகும் என அறிஞர்கள் கூறுகின்றனர். கி.பி. பதின்மூன்றாம் நூற்றாண்டில் தோன்றிய நன்னூல் என்னும் இலக்கண நூலும் இதற்குப் பின்னர்த் தோன்றிய நேமிநாதம், நம்பி அகப்பொருள், புறப்பொருள் வெண்பாமாலை, யாப்பருங்கலம், யாப்பருங்கலக்காரிகை ஆகிய இலக்கண நூல்களும் சமணர் படைத்து அளித்தவையேயாகும். தமிழில் அதிக இலக்கண நூல்களை எழுதிய பெருமை சமணர்களையே சார்ந்ததாகும்.

 பிற நூல்கள்

செய்யுள் நூல்களுக்கு விரிவாக உரை எழுதுகின்ற ஒரு நிலையைச் சமணர்கள் வளர்த்தனர். இது கல்வி பெறுவதற்கு அடிப்படையாக ஆயிற்று. தொல்காப்பியத்திற்கு முதன்முதல் உரை எழுதியவர் இளம்பூரணர் என்ற சமணரே ஆவார். இவர் தமிழ்ப் பண்பாட்டு நிலையைத் தழுவி அந்த நூலுக்கு உரை எழுதியுள்ளார். அவரை அடுத்து உரை ஆசிரியர் பலர் தோன்றியுள்ளனர்.

இந்தக் காலத்தில் அகராதி என்ற நூல் வகையை நாம் அறிவோம். அந்த அகராதிகளுக்கு மூல நூல்கள் என்று குறிப்பிடப்படுவன நிகண்டுகள் என்பனவாகும். நிகண்டுகள் என்பன செய்யுள் வடிவில் உள்ள அகராதிகளேயாகும். அந்த நிகண்டினைத் தோற்றுவித்த பெருமை சமணர்களையே சாரும். திவாகரம், சூடாமணி, பிங்கலந்தை என்ற நிகண்டுகள் சமணர்களால் படைக்கப்பட்டன.

சிறு காப்பியங்கள் எனச் சொல்லப்படும் ஐந்து நூல்களைச் சமணர்கள் இயற்றித் தந்தனர். மேருமந்தர புராணம் என்ற புராண நூலைத் தந்தவரும் சமணரே ஆவர். இவ்வாறு பலவகை நூல்களைத் தந்த பெருமை சமணர்களுடையதாகும்.

Tuesday, 15 April 2025

 தொல் பொருள் ஆராய்ச்சி பற்றி  அறிய கீழடியும் கட்டிடம் மற்றும் சிற்பக் கலைகள் பற்றி அறிந்துக் கொள்ள மதுரை மீனாட்சி கோவிலுக்கும்  மாணவிகளை   கல்விச் சுற்றுலா அழைத்து செல்லப்பட்டது.
















Monday, 17 March 2025

 

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு திருப்பத்தூர்  மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற மகளிர் தின கருத்தரங்க நிகழ்வில் பேராசிரியர்கள் டாக்கர். ஜெமிமா ஜெப செல்வி மற்றும் திருமதி .பூங்கோதை ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று சிறப்புரையாற்றினர். திருப்பத்தூர் மாவட்டம் சார்பாக நடைபெற்ற புத்தக திருவிழா-2025  இல் பேராசிரியர் திரு. நாவுக்கரசன் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றினார்









திருவள்ளுவர் பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற YOUTH FEST  நிகழ்வில் வார்தையோடு விளையாடு போட்டியில்  மாணவி தீபரதி பங்கேற்றார். 

S. No

Name of the Students

Class

Name of the Competition

Date

 Participated Institution Name with Place

LEVEL

(Institutional/ District/ State/ National/ International)

Cash Prize/ Prize/ Certificate

1

K. Deeparathi

I BA Tamil

Kavithai Poti

08.03.2025

Kavicciradu Pataippalikal Ulakam

District

Certificate

2

K. Deeparathi

S. Jayapradha

I BA Tamil

Katturai Pori

08.03.2025

Kavicciradu Pataippalikal Ulakam

District

Certificate

3

K. Deeparathi

I BA Tamil

Varthaiyodu Vilaiyadu

07.03.2025

Thiruvalluvar University, Vellore

District

Certificate

4

K. Deeparathi

I BA Tamil

Varthaiyodu Vilaiyadu

07.03.2025

Thiruvalluvar University

District

Certificate

5

K. Deeparathi

I BA Tamil

Kathaiyodu Mudivu Thedu

07.03.2025

Thiruvalluvar University

District

Certificate

S. Shobans

III BA Tamil

Lyrics

20.03.2025

Tamil Nadu Unavup Porul Valankal Mattrum Nukarvor

Sistric

Certificate






Tuesday, 11 February 2025

 

பேராசிரியர்கள் ஆசிரியர் திறன் மேம்பாடு நிகழ்வு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்றமை மேலும் புதுமை சிந்தனையாளர் -2025 நிகழ்வில் தமிழ்த்துறை முதலாமாண்டு  மாணவி  எஸ். ஜகதீஷ்வரி  பங்கேற்று சான்றிதழ் பெற்றுள்ளார்.



S.No

Name of the Faculty

No. of  Seminar/WS/FDP/Conference/Webinar attended

No.of Book/Book Chapter/ Conference Proceedings/ Journal /Patent Publication

No. of Paper presented in Seminar/Conference

                   Resource Person/External Examiner/Question Paper Setter/BoS/ DC Member/Any Other(

 

Mr. K.Navukkarasan  

 

 

 

Resource Person

 

Ms. R. Kasthuri

FDP -2

 

 

Award -1

Thursday, 9 January 2025

 


January  Month Achievement 

Faculty Empowerment :-

 

S.No

Name of the Faculty

No. of  Seminar/WS/FDP/Conference/Webinar attended

No.of Book/Book Chapter/ Conference Proceedings/ Journal /Patent Publication

No. of Paper presented in Seminar/Conference

                   Resource Person/External Examiner/Question Paper Setter/BoS/ DC Member/Any Other(

1

Ms. K.Malathi

-

-

 

-

Resource Person

2

Mr. K. Navukarasan

-

-

 

-

Resource Person

 

Ms. Poovizhi

FDP -1

 

 

 


குடியரசு தினவிழா மற்றும் வள்ளுவர் தின விழாவில் பேராசிரியர்கள் சிறப்பு விருந்தினர்களாகவும் , நான் முதல்வன்ஆசிரியர் திறன் மேம்பாடு  நிகழ்விலும்  பங்கேற்றனர்.