குறுந்தொகை
தலைவி கூற்று
குறுந்தொகை 12,
ஓதலாந்தையார்,
பாலைத் திணை – தலைவி தோழியிடம் சொன்னதுஎறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே!
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
பொருளுரை: அவர் சென்ற பாலை நிலத்தில் எறும்பு வளைகள் போன்ற பாதைகளும், சிறிய பல சுனைகளும், கொல்லனின் உலைகள் போல் (சூடான) உள்ள பாறைகளில் ஏறி கொடுமையான வில்லையுடைய எயினர்கள் தங்கள் அம்புகளைக் கூர்மையாக்கும் வழிகளும் உண்டு. அதுப்பற்றி வருந்தாது, பழிச் சொற்களைக் கூறுகின்றது, ஆரவாரமுடைய இந்த ஊர்.
பதவுரை: எறும்பி அளையின் – எறும்பின் வளைகளைப்போல், குறும்பல் சுனைய – சிறிய பல சுனைகள், உலைக்கல் அன்ன – கொல்லனது உலைக்கல்லைப் போல் வெட்பமுடைய, பாறை ஏறி – பாறை மீது ஏறி, கொடு வில் எயினர் – கொடிய வில்லையுடைய எயினர்கள் – பாலை நிலத்தில் பிறரை துன்புறுத்துவோர், பகழி மாய்க்கும் – அம்புகளைத் தீட்டும், கவலைத்து – கடினமான வளைந்தப் பாதைகளில், என்பவர் – என்னுடையவர், சென்ற ஆறே – சென்ற வழி, அது மற்ற அவலம் கொள்ளாது – என்னுடைய துன்பத்தை அறியாது, நொதுமல் கழறும் – பழிக்கும் சொற்கள் கூறும், இவ் – இந்த, அழுங்கல் ஊரே – ஆரவாரமுடைய ஊர்
மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே.
பொருளுரை: உயர்ந்த மலையிலிருந்து விழும் தூய வெள்ளை அருவி மலைக் குகைகளில் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த மலைச்சரிவில் உள்ள சிறு குடியில் வாழும் குறவனின் பெரியத் தோளையுடைய, சிறிய மகளினது நீர் போன்ற மென்மை, என் வலிமையைக் கெடச் செய்தது.
பதவுரை: மால்வரை – உயர்ந்த மலை, இழிதரும் – வடியும், தூவெள் அருவி – தூய வெள்ளை அருவி, கல்முகைத் – மலைக் குகைகள், ததும்பும் – நிறைந்திருக்கும், பன்மலர் – நிறைய மலர்கள், சாரல் – மலைச் சரிவுகள், சிறுகுடிக் குறவன் – சிறியக் குடியில் வாழும் மலைக் குறவன், பெருந்தோள் – பெரியத் தோள், குறுமகள் – இளம் மகள், நீரோரன்ன சாயல் – நீர் போன்ற சாயல், தீயோரன்ன என் – தீயைப்போன்ற, உரன் வித்தன்றே – என் வலிமையைக் கெடச் செய்தது
குறுந்தொகை
212, நெய்தற் கார்க்கியன், நெய்தற் திணை – தோழி சொன்னது
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடை கரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற, நோகோ யானே.
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடை கரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற, நோகோ யானே.
பொருளுரை:
நெய்தல் நிலத்
தலைவனான உன்னுடைய காதலன்
தாமரை
அலங்காரத்தையுடைய உயர்ந்த தேரில்
மணிகளின் ஒலியுடன் வருகின்றான். தெளிந்த நீரை
உடைய
கடல்
அலைகள்
இடிக்கும் மணல்
நிறைந்த கடற்கரையில் தேரை
ஒட்டிக் கொண்டு
உன்னைக்காண வந்து
விட்டு,
நாம்
நாணும்படி சென்று
விடுகின்றான். இந்தக் காதல்
பரிதாபத்திற்கு உரியது.
நிச்சயமாக இது
அழிந்து விடும்.
நான்
உனக்காக வருந்துகின்றேன்.
.
பதவுரை: கொண்கன் – நெய்தல் நிலத் தலைவன், ஊர்ந்த – ஒட்டிக்கொண்டு வந்த,
கொடுஞ்சி – தேரின்
முன்
பகுதியில் உள்ள
அலங்காரம், நெடுந்தேர் – உயர்ந்த தேர்,
தெண்
கடல்
– தெளிவான நீரையுடையக் கடல்,
அடைகரை
– மணல்
அடைந்தக் கரை,
தெளிமணி – தெளிவான மணிகள்,
ஒலிப்ப
– ஒலிக்க,
காண
வந்து
– உன்னைப் பார்க்க வந்து,
நாணப்
பெயரும் – நாணும்படி சென்று
விடுவது, அளிதோ தானே
காமம்
– காதல்
என்பது
பரிதாபமானது, விளிவது – அழியும், மன்ற – கண்டிப்பாக, நோகோ யானே
– நான்
வருந்துகின்றேன்
126. முல்லை
''இளமை
பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும்
வாரார்; எவணரோ?'' என,
பெயல்
புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு
முகை இலங்கு எயிறு ஆக
நகுமே
தோழி! நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஒக்கூர் மாசாத்தி பாடல்
கார் காலமானது தன் மழை தந்த
முல்லைப்பூப் பல்லைக் காட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அது சொல்கிறது, அவர்
உன் இளமை நலத்தைப் பார்க்கவில்லை. பொருள் வளத்தையே விரும்பிச் சென்றுள்ளார்.
போனவர் இன்னும் வரவில்லை. எங்கு இருக்குறாரோ தெரியவும் இல்லை.
(பரத்தையரிடத்திருந்து வந்த
தலைவனை
நோக்கி,
“நின்சூள் பொய்யுடைத்து” என்று
கூறித்
தோழி
வாயில்
மறுத்தது.)
உழுந்துடைக்
கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர் நலனுண்டு துறத்தி யாயின் மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே. |
|
- ஓரம்போகியார்.
|
தலைவ உழுத்தங்காயை அடித்தற்கு உரிய கழுந்துள்ள தடியைப்போல உள்ள கரும்பெழுதிய தொய்யிலையுடைய பருத்த தோளையும் நெடிய பலவாகிய கூந்தலையும் குறிய வளைகளையும் உடைய பரத்தையரது பெண்மைநலத்தை நுகர்ந்து துறந்துஈண்டு வருவாயாயின் நீ அவர் மாட்டுச் செய்தசூள் மிக நன்றாக இருந்தது!
முடிபு: மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின் சூள் மிக நன்று!
கருத்து: நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.
பெண்மை நலன் உண்டு துறத்தல்
|
384. மருதம்
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத்
தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம மகிழ்ந! நின் சூளே.
''நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!'' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.
ஓரம்போகியார்
அவர்கள் (பரத்தையர்) உழுந்து அடிக்க உதவும் குண்டாந்தடி
போன்றதும் கரும்பு எழுதப்பட்டதுமான தோளை உடையவர்கள். நீண்ட பலவாகிய கூந்தலை
உடையவர்கள். வளையல்களை மிகுதியாக அணிந்திருப்பவர்கள்.
மகிழ்ந! அவர்களின் பெண்மை நலத்தை உண்டபின் அவர்களைக்
கைவிட்டுவிட்டால் நீ அவர்களைக் கைவிடமாட்டேன் என்று அவர்களைக்குச் செய்து கொடுத்த
சத்தியம் என்ன ஆவது? அழகாக இருக்கிறதே உன் சத்தியம்!
No comments:
Post a Comment