Friday, 16 February 2018

ஜனவரி மாதம் அறிக்கை



குறுந்தொகை
தலைவி கூற்று
குறுந்தொகை 12, ஓதலாந்தையார், பாலைத் திணைதலைவி தோழியிடம் சொன்னது
எறும்பி அளையின் குறும்பல் சுனைய
உலைக் கல் அன்ன பாறை ஏறிக்
கொடு வில் எயினர் பகழி மாய்க்கும்
கவலைத்து என்ப அவர் சென்ற ஆறே!
அது மற்ற அவலம் கொள்ளாது
நொதுமல் கழறும், இவ் அழுங்கல் ஊரே.
பொருளுரை:   அவர் சென்ற பாலை நிலத்தில் எறும்பு வளைகள் போன்ற பாதைகளும், சிறிய பல சுனைகளும், கொல்லனின் உலைகள் போல் (சூடான) உள்ள பாறைகளில் ஏறி கொடுமையான வில்லையுடைய எயினர்கள் தங்கள் அம்புகளைக் கூர்மையாக்கும் வழிகளும் உண்டு.  அதுப்பற்றி வருந்தாது, பழிச் சொற்களைக் கூறுகின்றது, ஆரவாரமுடைய இந்த ஊர்.
பதவுரை:   எறும்பி அளையின்எறும்பின் வளைகளைப்போல்குறும்பல் சுனையசிறிய பல சுனைகள்உலைக்கல் அன்னகொல்லனது உலைக்கல்லைப் போல் வெட்பமுடையபாறை ஏறிபாறை மீது ஏறிகொடு வில் எயினர்கொடிய வில்லையுடைய எயினர்கள்பாலை நிலத்தில் பிறரை துன்புறுத்துவோர்பகழி மாய்க்கும்அம்புகளைத் தீட்டும்கவலைத்துகடினமான வளைந்தப் பாதைகளில்என்பவர்என்னுடையவர், சென்ற ஆறேசென்ற வழி, அது மற்ற அவலம் கொள்ளாது –  என்னுடைய துன்பத்தை அறியாதுநொதுமல் கழறும்பழிக்கும் சொற்கள் கூறும்இவ்இந்த, அழுங்கல் ஊரேஆரவாரமுடைய ஊர்

குறுந்தொகை 95,  கபிலர்குறிஞ்சித் திணைதலைவன் தன் நண்பனிடம் சொன்னது
மால் வரை இழி தரும் தூ வெள் அருவி
கல் முகைத் ததும்பும் பன்மலர்ச் சாரல்
சிறு குடிக் குறவன் பெருந்தோள் குறுமகள்,
நீரோரன்ன சாயல்,
தீயோரன்ன என் உரன் வித்தன்றே.
பொருளுரை:   உயர்ந்த மலையிலிருந்து விழும் தூய வெள்ளை அருவி மலைக் குகைகளில் ஒலிக்கும் மலர்கள் நிறைந்த மலைச்சரிவில் உள்ள சிறு குடியில் வாழும் குறவனின் பெரியத் தோளையுடைய, சிறிய மகளினது நீர் போன்ற மென்மை, என் வலிமையைக் கெடச் செய்தது.
பதவுரை:   மால்வரைஉயர்ந்த மலைஇழிதரும்வடியும்தூவெள் அருவிதூய வெள்ளை அருவிகல்முகைத்மலைக் குகைகள், ததும்பும் –  நிறைந்திருக்கும், பன்மலர்நிறைய மலர்கள்சாரல்மலைச் சரிவுகள்சிறுகுடிக் குறவன்சிறியக் குடியில் வாழும் மலைக் குறவன்பெருந்தோள்பெரியத் தோள்குறுமகள்இளம் மகள்நீரோரன்ன சாயல்நீர் போன்ற சாயல்தீயோரன்ன என்தீயைப்போன்றஉரன் வித்தன்றேஎன் வலிமையைக் கெடச் செய்தது
குறுந்தொகை 212, நெய்தற் கார்க்கியன்,  நெய்தற் திணைதோழி சொன்னது
கொண்கன் ஊர்ந்த கொடுஞ்சி நெடுந்தேர்
தெண் கடல் அடை கரைத் தெளி மணி ஒலிப்பக்
காண வந்து நாணப் பெயரும்,
அளிதோ தானே காமம்,
விளிவது மன்ற, நோகோ யானே.
பொருளுரை:   நெய்தல் நிலத் தலைவனான உன்னுடைய காதலன் தாமரை அலங்காரத்தையுடைய உயர்ந்த தேரில் மணிகளின் ஒலியுடன் வருகின்றான். தெளிந்த நீரை உடைய கடல் அலைகள் இடிக்கும் மணல் நிறைந்த கடற்கரையில் தேரை ஒட்டிக் கொண்டு உன்னைக்காண வந்து விட்டு, நாம் நாணும்படி சென்று விடுகின்றான்இந்தக் காதல் பரிதாபத்திற்கு உரியதுநிச்சயமாக இது அழிந்து விடும். நான் உனக்காக வருந்துகின்றேன்.
.
பதவுரை:   கொண்கன்நெய்தல் நிலத் தலைவன்ஊர்ந்தஒட்டிக்கொண்டு வந்தகொடுஞ்சிதேரின் முன் பகுதியில் உள்ள அலங்காரம்நெடுந்தேர்உயர்ந்த தேர்தெண் கடல்தெளிவான நீரையுடையக் கடல்அடைகரைமணல் அடைந்தக் கரை,   தெளிமணிதெளிவான மணிகள், ஒலிப்பஒலிக்க, காண வந்துஉன்னைப் பார்க்க வந்துநாணப் பெயரும்நாணும்படி சென்று விடுவதுஅளிதோ தானே காமம்காதல் என்பது பரிதாபமானதுவிளிவதுஅழியும்மன்றகண்டிப்பாகநோகோ யானேநான் வருந்துகின்றேன்

126. முல்லை
''இளமை பாரார் வளம் நசைஇச் சென்றோர்
இவணும் வாரார்; எவணரோ?'' என,
பெயல் புறந்தந்த பூங் கொடி முல்லைத்
தொகு முகை இலங்கு எயிறு ஆக
நகுமே தோழி! நறுந் தண் காரே.
பருவம் கண்டு அழிந்த தலைமகள் தோழிக்குச் சொல்லியது
ஒக்கூர் மாசாத்தி பாடல்

கார் காலமானது தன் மழை தந்த முல்லைப்பூப் பல்லைக் காட்டி என்னைப் பார்த்துச் சிரிக்கிறது. அது சொல்கிறது, அவர் உன் இளமை நலத்தைப் பார்க்கவில்லை. பொருள் வளத்தையே விரும்பிச் சென்றுள்ளார். போனவர் இன்னும் வரவில்லை. எங்கு இருக்குறாரோ தெரியவும் இல்லை.

(பரத்தையரிடத்திருந்து வந்த தலைவனை நோக்கி, “நின்சூள் பொய்யுடைத்துஎன்று கூறித் தோழி வாயில் மறுத்தது.)

உழுந்துடைக் கழுந்திற் கரும்புடைப் பணைத்தோள்
நெடும்பல் கூந்தற் குறுந்தொடி மகளிர்
நலனுண்டு துறத்தி யாயின்
மிகநன் றம்ம மகிழ்நநின் சூளே.

- ஓரம்போகியார்.



தலைவ உழுத்தங்காயை அடித்தற்கு உரிய கழுந்துள்ள தடியைப்போல உள்ள கரும்பெழுதிய தொய்யிலையுடைய பருத்த தோளையும் நெடிய பலவாகிய கூந்தலையும் குறிய வளைகளையும் உடைய பரத்தையரது பெண்மைநலத்தை நுகர்ந்து துறந்துஈண்டு வருவாயாயின் நீ அவர் மாட்டுச் செய்தசூள் மிக நன்றாக இருந்தது!

முடிபு: மகிழ்ந, மகளிர் நலன் உண்டு துறத்தியாயின், நின் சூள் மிக நன்று!  

கருத்து: நின்மொழியை மெய்யென்று எண்ணி மயங்கேம்.    

பெண்மை நலன் உண்டு துறத்தல்
384. மருதம்
உழுந்துடை கழுந்தின் கரும்புடைப் பணைத் தோள்,
நெடும் பல் கூந்தல், குறுந்தொடி, மகளிர்
நலன் உண்டு துறத்தி ஆயின்,
மிக நன்று அம்ம மகிழ்ந! நின் சூளே.

''நின் பரத்தையர்க்கு நீ உற்ற சூளூறவு நன்றாயிருந்தது!'' என்று நகையாடித் தோழி வாயில் மறுத்தது.
ஓரம்போகியார்

அவர்கள் (பரத்தையர்) உழுந்து அடிக்க உதவும் குண்டாந்தடி போன்றதும் கரும்பு எழுதப்பட்டதுமான தோளை உடையவர்கள். நீண்ட பலவாகிய கூந்தலை உடையவர்கள். வளையல்களை மிகுதியாக அணிந்திருப்பவர்கள்.
மகிழ்ந! அவர்களின் பெண்மை நலத்தை உண்டபின் அவர்களைக் கைவிட்டுவிட்டால் நீ அவர்களைக் கைவிடமாட்டேன் என்று அவர்களைக்குச் செய்து கொடுத்த சத்தியம் என்ன ஆவது? அழகாக இருக்கிறதே உன் சத்தியம்!

No comments:

Post a Comment