Wednesday, 9 November 2022

மனித உரிமை 
      மனித உரிமை என்பது, ஒவ்வொரு மனிதனுக்கும் கிடைக்கப் பெறவேண்டிய மற்றும் உரித்தான அடிப்படை உரிமைகளும், சுதந்திரங்களும் ஆகும். மனிதன் என்றாலே அவன் இவைகளால் வாழ முடியாது என கருதப்படும் அடிப்படையான தேவைகளை உள்ளடக்கிய உரிமைகள் இதில் சாரும். இந்த உரிமைகளை "மனிதர்கள், மனிதர்களாகப் பிறந்த காரணத்தினால் அவர்களுக்குக் கிடைத்த அடிப்படையான, விட்டுக் கொடுக்க இயலாத, மறுக்க முடியாத சில உரிமைகளாக"மனித உரிமைகள் என்றால் என்ன?கருதப்படுகின்றன.

       இனம், சாதி, நிறம், சமயம், பால், தேசியம், வயது, உடல் உள வலு ஆகியவற்றுக்கு அப்பால் ஒவ்வொரு தனி மனிதருக்கும் இருக்கும் இந்த அடிப்படை உரிமைகள், மனிதர் சுதந்திரமாக, சுமுகமாக, நலமாக வாழ அவசியமான உரிமைகளாகக் கருதப்படுகின்றன. மனித உரிமைகள் என்பவற்றுள் அடங்குவதாகக் கருதப்படும் குடிசார் மற்றும் அரசியல் உரிமைகளுள், வாழும் உரிமைசுதந்திரம்கருத்து வெளிப்பாட்டுச் சுதந்திரம்சட்டத்தின் முன் சமநிலைநகர்வுச் சுதந்திரம்பண்பாட்டு உரிமைஉணவுக்கான உரிமைகல்வி உரிமை என்பன முக்கியமானவை. மனிதனின் இன்றியமையாத தேவைகளான நீர், நிலம், காற்று. உறைவிடம், பிறப்பு மற்றும் வாழுதல் போன்றவைகளை அடிப்படையாகக் கொண்டும் அந்தந்த நாட்டின் மூலச்சட்டங்களையும் கருத்தில் கொண்டும் இந்த மனித உரிமைகள் வடிவமைக்கப்படுகின்றன.

       வாழ்வுரிமை அல்லது வாழ்வதற்கான உரிமை என்பது எல்லா மனிதருக்கும் உரித்தான ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். குறிப்பாக பிற மனிதர்களால் கொல்லப்படாமல் இருப்பது வாழும் உரிமை ஆகும். வாழும் உரிமையே இனப்படுகொலைசட்டத்துக்குப்புறம்பான படுகொலைகள்தன்னிச்சையான படுகொலைகளை குற்றச்செயல்களாக ஆக்குகிறது. இந்த உரிமை கருக்கலைப்புகருணைக் கொலைமரண தண்டனைதற்காப்புப் போர் ஆகிய விவாதங்களில் முதன்மை பெறுகிறது. வாழும் உரிமை மிக முக்கியமானதாக இருந்தாலும் எல்லா நாடுகளும் சட்டங்களுக்கும் முறைமைகளுக்கும் கட்டுப்பட்டு அரசுகள் மனிதர்களைக் கொல்ல முடியும்.
 மனித உரிமைகள் என்பது தொடர்பாக பல்வேறு வெளிப்படுத்தல்கள் உள்ளன. அனைத்துலக மட்டத்தில் ஐக்கிய நாடுகளால் வெளியிடப்பட்ட உலக மனித உரிமைகள் சாற்றுரைகள் அடிப்படையாக பெரும்பான்மை நாடுகளால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இந்த சான்றுரை குடிசார் அரசியல் உரிமைகளையும், பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் பற்றியும் எடுத்துரைக்கிறது. பொருளாதார சமூக பண்பாட்டு உரிமைகள் International Covenant on Economic, Social and Cultural Rights என்ற சான்றுரையிலும் விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ஐக்கிய அமெரிக்காவின் உரிமைகளின் சட்டம், கனடாவின் உரிமைகள் சுதந்திரங்களுக்கான கனடிய சாசனம் போன்று பல்வேறு நாடுகளில் மனித உரிமைகளை வெளிப்படுத்தி சட்டங்கள் உள்ளன.

   உணவுக்கான உரிமை என்பது மக்கள் உணவை உற்பத்திசெய்து, அல்லது கொள்வனவுசெய்து மானத்துடன் உண்பதற்கான உரிமை ஆகும். இது அனைத்துலகச் சட்டங்களில் உறுதிசெய்யப்பட்ட ஒர் அடிப்படை மனித உரிமை ஆகும். இந்த உரிமையின் நீட்சியாக மக்கள் தம்மால் உச்சகட்டமாக முடிந்தளவு போதிய சத்தான உணவை உற்பத்தி செய்ய அல்லது கொளவனவுசெய்யத்தக்க சூழலை ஏதுவாக்குவது அரசுகளின் கடமை ஆகும்.[1] சிறப்பாக, இந்த உரிமை மக்கள் போரால் அல்லது இயற்கை அனர்த்தங்களால் பாதிக்கப்பட்டு இருக்கும் போது, தடுத்து வைக்கப்பட்டு இருக்கும் அரசுகள் உணவு வழங்கவேண்டும் என்பதை வலியுறுத்துகிறது.

மனித உரிமையின் வரலாறு பல ஆயிரம் ஆண்டுகளை உள்ளடக்கியுள்ளதுடன், பதிவு செய்யப்பட்ட வரலாற்றுக் காலம் முழுவதிலும் சமய, பண்பாட்டு, மெய்யியல், சட்டம் ஆகிய துறைகளின் வளர்ச்சிகளினால் வளம்பெற்றுள்ளது.

     நவீன மனித உரிமைச் சட்டத்தின் பெரும் பகுதியும், மனித உரிமை என்பதற்கான நவீன விளக்கங்களின் அடிப்படையும், ஒப்பீட்டளவில் அண்மைக்கால வரலாறாகும். 1525 ஆம் ஆண்டில் விவசாயிகளின் கோரிக்கைகள் தொடர்பாக செருமனியில் வெளியிடப்பட்ட "கருப்புக் காட்டின் பன்னிரண்டு அம்சங்கள்" (Twelve Articles of the Black Forest) என்னும் ஆவணமே ஐரோப்பாவின் முதல் மனித உரிமை தொடர்பான பதிவு எனக் கருதப்படுகின்றது. 1689 ஆம் ஆண்டில் உருவாக்கப்பட்ட பிரித்தானிய உரிமைகள் சட்டமூலம் என அழைக்கப்படும், "குடிமக்களின் உரிமைகள், சுதந்திரங்கள், அரசுக்கான வாரிசு உரிமை தீர்மானித்தல் ஆகியவற்றுக்கான சட்டம்", ஐக்கிய இராச்சியத்தில் பலவகையான அரசாங்க ஒடுக்குமுறைகளைச் சட்டத்துக்குப் புறம்பானவையாக ஆக்கியது.