ஸ்ரீ பாரதி கலை மற்றும் அறிவியல் கல்லூரி – குண்ணத்தூர், ஆரணி முத்தமிழ் பெருவிழாவினை
(2022) முன்னிட்டு கல்லூரி மாணவர்களுக்கு மாநில அளவிலான பேச்சுப்போட்டி, கட்டுரைப்போட்டி, ஓவியப்போட்டி முதலியனவற்றை
20.04.2022 அன்று நடத்தியது. இதில் நமது மருதர் கேசரி ஜெயின் மகளிர் கல்லூரியைச் சார்ந்த இளங்கலை வணிக மேலாண்மையியல் துறை மூன்றாமாண்டு மாணவி செ.திவ்யதர்ஷினி பேச்சுப்போட்டியில் மூன்றாம் பரிசு ரூ.5000 பெற்றுள்ளார் என்பதை மனமகிழ்வுடன் தெரிவித்துக் கொள்கிறோம்.